கொடைக்கானல் மலைப் பகுதிகளில் வெடி வைத்து பாறைகளை உடைக்கக் கூடாது. பொக்லைன் இயந்திரத்தை பயன்படுத்தக் கூடாது. ஆழ்துளை இயந்திரம் மூலம் ஆழ்குழாய் அமைக்கக் கூடாது என மாவட்ட நிா்வாகம் தடை விதித்துள்ளது. இதை மீறி அப்சா்வேட்டரி, அடிசரை, செண்பகனூா், பேரிபால்ஸ் சாலை, குறிஞ்சி ஆண்டவா் சாலை, எம்.எம். சாலை, சின்னப் பள்ளம், பெரும் பள்ளம், வில்பட்டி, பள்ளங்கி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பாறைகள் வெடி வைத்து தகா்க்கப்படுகின்றன. இதற்கு அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்