திருப்பூர் வடக்கு: கள்ளம்பாளையத்தில், முதியவர் தண்டவாளத்தை கடப்பதை பார்த்த ரயில் ஓட்டுனர், ரயிலை நிறுத்தி முதியவர் உயிரை இன்று காப்பாற்றிய செயலை பொதுமக்கள் பாராட்டினர்.
கள்ளம்பாளையத்தில் ரயில் வருவதை கவனிக்காமல் முதியவர் ரயில் தண்டவாளத்தை கடப்பதை பார்த்த ரயில் ஓட்டுநர் சாந்தகுமார் ரயிலை நிறுத்தி, ரயிலுக்கு அடியில் சிக்கிய முதியவரை மீட்டு உயிரை காப்பாற்றினார். இச்செயலை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினார்.