விருத்தாசலம்: விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோவில் பங்குனி உத்திரப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
கொளஞ்சியப்பர் கோயில் இந்த ஆண்டிற்கான திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கி, வரும் 24-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை நடக்கிறது. பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு கடந்த 12ஆம் தேதி கிராம தேவதைகளான செல்லியம்மன், அய்யனார் கோவில் காப்பு கட்டும் உற்சவம் நடந்தது.முன்னதாக சித்தி விநாயகர் உடன் உரை கொளஞ்சியப்பருக்கு பால்,தயிர் இளநீர்,தேன் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.