உணவு துறை அமைச்சர் சக்கரபாணி, திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் முன்னிலையில், திண்டுக்கல் மாவட்டம், பழனி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கீரனூர் ஊராட்சியில், நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.20 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ரேஷன் கடை மற்றும் உயர்மின் கோபுர மின் விளக்கினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார் இந்நிகழ்ச்சியில், பழனி வட்டாட்சியர் பிரசன்னா, கீரனூர் பேரூராட்சி செயல் அலுவலர் ரோஹினி உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்