தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள லிங்கம்பட்டி பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது இந்நிலையில் இந்த இடத்தை அளந்து தர வேண்டும் எனக் கூறி மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோட்டாட்சியர் ஹுமாயின் சூ மங்கள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் அளந்து தர நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதை தொடர்ந்து அவர்கள் கலந்து சென்றனர்.