வாணியம்பாடி: கஜாநகர் பகுதியில் 8 மாத காலமாக குடிநீர் வழங்காததால் வார்டு உறுப்பினர் தலைமையில் பொதுமக்கள் காலி குடங்களுடன் போராட்டம்
வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்டு கஜா நகர் பகுதியில் கடந்த எட்டுமாத காலமாக சரிவர குடிநீர் விநியோகம் செய்யப்படாத நிலையில் இது தொடர்பாக நகராட்சிக்கு பலமுறை பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று மாலை நகர மன்ற உறுப்பினர் இக்பால் அகமத் தலைமையில் பொதுமக்கள் காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.