பழனி: முன்விரோதம் காரணமாக கொலை செய்த 2 பேருக்கு ஆயுள் தண்டனை, தலா ரூ.10,000 அபராதம் பழனி நீதிமன்றம் தீர்ப்பு
ஒட்டன்சத்திரம் அருகே கடந்த 2014ம் ஆண்டு முன்விரோதம் காரணமாக ராபர்ட்கென்னடி என்பவரை கொலை செய்த வழக்கில் ஒட்டன்சத்திரம் காந்திநகரை சேர்ந்த முனியப்பன், மணிகண்டன் ஆகிய 2 பேரை ஒட்டன்சத்திரம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கு பழனி கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில் நீதிபதி அவர்கள், முனியப்பன், மணிகண்டன் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை தலா ரூ.10,000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்