முசிறி: மருதம்பட்டியில் ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட 96 ஆயிரத்து 30 ரூபாய் பணம் தேர்தல் பறக்கும் படையினர் கைப்பற்றிகருவூலத்தில் ஒப்படைத்தனர்.
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் தொட்டியம் வட்டம் காட்டுப்புத்தூர் நாமக்கல் செல்லும் சாலையில் மருதம்பட்டி பகுதியில் பறக்கும் படை அலுவலர் ராஜேஷ்வரி தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது நாமக்கல் மாவட்டம் களங்காணி பகுதியைச் சேர்ந்தசஞ்சய் என்பவர் வேனை சோதனை செய்ததில் 96,030 கைப்பற்றப்பட்டது