மயிலாடுதுறை தோப்புத்தெருவை சேர்ந்தவர் விக்னேஷ். இவர் வெளிநாடுகளில் புகழ்பெற்ற கலையாக விளங்கும் சன் லைட் பர்னிங் வுட் ஆர்ட் என்ற கலையை ஆசியாவிலேயே முதல்முறையாக இந்தியாவில் தொடங்கி கடந்த 10 ஆண்டுகளாக வரைந்து அசத்தி வருகிறார். மரக்கட்டைகளில் லென்ஸ் மூலம் சூரிய கதிர்களை ஓரிடத்தில் குவித்து அதில் தோன்றும் நெருப்பு மூலம் ஓவியம் வரைவது பர்னிங் வுட் ஆர்ட் ஆகும். இளைஞர் விக்னேஷ் ஏற்கெனவே பல்வேறு திரை நட்சத்திரங்கள், கிரிக்கெட் ஆளுமைகள், கடவுள் திருவுருவங்கள், அரசியல் பிரபலங்க