மயிலாடுதுறை தலைமை தபால் நிலையம் எதிரில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள நான்கு தொழிலாளர் சட்ட திருத்தங்களை திரும்ப பெற வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்தும், கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கமான சிஐடியு சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. அப்போது மத்திய அரசுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பியும், சட்ட திருத்தங்களை வாபஸ் பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிஐடியு மாவட்ட செயலாளர் மாரியப்பன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், தொழிற்சங்கத்தைச் சார்ந்த அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்ட மகளிர் 150 பேர் ப