திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்த தும்மலபட்டி பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த 9 பேரை விஷதேனீக்கள் கொட்டியதால் பலத்த காயம் அடைந்து பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி உடனடியாக பழனி அரசு மருத்துவமனைக்கு சென்று காயம் அடைந்தவர்களை பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.