கோவில்பட்டி: தாலுக்கா அலுவலகத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மந்திதோப்பு நகர் துளசிங்க நகர் பகுதி மக்களுக்கு பட்டா வழங்க கோரி முற்றுகை
கோவில்பட்டி அருகே உள்ள மந்திதோப்பு துளசிங்க நகர் உள்ளிட்ட பகுதிகளில் வாழும் மக்களுக்கு வீட்டுமனை பட்டா தற்போது வரை வழங்கப்படவில்லை இந்த மக்களுக்கு உடனடியாக இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் எனக் கூறி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா குழு சார்பில் செயலாளர் பாபு தலைமையில் கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர் தொடர்ந்து தங்களது கோரிக்கை மனுவை தாலுகா அலுவலகத்தில் வழங்கினார்.