மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள இணை வேளாண்மைதுறை அலுவலகத்தில் பசுமை தமிழ்நாடு இயக்கம் திட்டத்தின் கீழ் புங்கன், வாகை, மகிழம் மற்றும் பாதாம் உள்ளிட்ட 60 வகையிலான மரக்கன்றுகள் நடவு செய்யும் பணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன், அவர்கள் தொடங்கி வைத்தார்.இப்பணியினை கிராம தங்கல் திட்டத்தின் கீழ் பயிற்சி பெரும் தோட்டக்கலை கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் வாணவராயர் வேளாண்மை கல்வி நிறுவன மாணவ, மாணவிகள் சிறப்பாக செய்து வருகின்றனர்