உடையார்பாளையம்: உதயநத்தம் ஊராட்சியில் விசிக தலைவர் திருமாவளவனுக்கு ஆதரவாக வீடுவீடாக வாக்கு சேகரித்த எம்எல்ஏ
சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் விசிக தலைவர் திருமாவளவனுக்கு ஆதரவாக அரியலூர் மாவட்டம் உதயநத்தம் ஊராட்சியில் ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன் இன்று வாக்கு சேகரித்தார். அப்போது உதயநத்தம் ஊராட்சியில் வீடு, வீடாக சென்று வாக்கு சேகரித்தார். மேலும் பானை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கூறி துண்டு பிரச்சுரம் வழங்கி வாக்கு சேகரிக்கபட்டது.