காளையார்கோவில்: காளையார் கோவில் விஐபி நகர் அருகே நடந்த இருசக்கர வாகன விபத்தில் பெண்கள் உட்பட 3 பேர் படுகாயம்
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் பாஸ்டின் நகரை சேர்ந்த ஜான்சி ராணி அவருடைய இருசக்கர வாகனத்தில் செல்வராணி என்ற பெண்ணுடன் காளையார்கோவில் விஐபி நகர் அருகே சென்றபோது திருப்பாச்சேத்தி பகுதியை சேர்ந்த பண்ணையன் அவரது இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்து ஜான்சிராணியின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் ஜான்சிராணி,செல்வராணி மற்றும் பண்ணையன் ஆகிய மூன்று பேர் காயம் அடைந்தனர்.இதுகுறித்து காளையார்கோவில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.