திண்டுக்கல்லில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்டத் தலைவர் தம்பித்துரை தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் தண்டபாணி, மாவட்ட பொருளாளர் ஞானசேகர் முன்னிலை வகித்தனர். ஓய்வூதியம் ஒப்படைப்பு செய்த பணத்தை 15 ஆண்டுகளாக பிடித்தம் செய்வதை 12 ஆண்டுகளாக குறைத்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.