திண்டுக்கல் அருகே N.S. நகர் பகுதியில் உள்ள தனியார் உணவு விடுதியில் சாப்பிட வந்த செல்லமந்தாடி எரமநாயக்கன்பட்டியை சேர்ந்த மணிகண்டன் மகன் பிரேம்குமார்(29), சரவணகுமார்(24), முருகன் மகன் பரத்(29) ஆகிய 3 பேரும் சாப்பிட்டனர். பின்பு கத்தியை காட்டி மிரட்டி உணவு விடுதியில் இருந்த சிசிடிவி கேமராவை உடைத்து சேர்களை தூக்கி எறிந்து உணவு விடுதியில் கல்லாவில் இருந்த பணத்தை எடுத்து சென்றது தொடர்பாக உணவு விடுதியில் உரிமையாளர் பாண்டி அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் 3 பேரை கைது செய்தனர்.