கரூர்: கரூர் எஸ்.பி அலுவலகத்தில் மாயனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என எஸ்.பியிடம் பாதிக்கப்பட்டவர் குடும்பத்துடன் புகார் மனு
Karur, Karur | Apr 10, 2024 கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டம் கட்டளை ரங்கநாதபுரம் ஊராட்சி சேர்ந்த முத்துசாமி மகன் நெப்போலியன் என்பவரை அவரது உறவினர்கள் ஆள் வைத்து நிலத்தகராறில் கடந்த மார்ச் 26 ஆம் தேதி அடித்து கையை உடைத்தனர். இது தொடர்பாக மாயனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், இன்று ஏப்ரல் 10ம் தேதி புதன்கிழமை கரூர் எஸ்.பி அலுவலகத்தில், குடும்பத்துடன் பாதிக்கப்பட்ட நெப்போலியன் புகார் மனு அளித்தார்.