திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி, இணை இயக்குநர் (வேளாண்மைத்துறை) பாண்டியன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) நாகேந்திரன், இணை இயக்குநர் (கால்நடை பராமரிப்புத்துறை) பாபு ஆகியோர் உட்பட துறை அலுவலர்கள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.