திண்டுக்கல், முள்ளிப்பாடி கிராமத்திலிருந்து அடியனூத்து வரை 19.5 கி.மீ மாநில சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த சாலை 7 வருவாய் கிராமங்களை உள்ளடக்கியதாகும். இங்கு சாலை அமைப்பதற்காக மாநில அரசு விவசாய நிலங்களை கையகப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். தற்போது ஜனவரி 7ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை காரணமாக மாநில நெடுஞ்சாலை பணி விரைவாக நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி விவசாயிகள் மற்றும் தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.