சென்னையில் கலைஞர் குத்துச்சண்டை மைதானத்தில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி, கடந்த 9ம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் திண்டுக்கல் மாவட்டம் சார்பில் கலந்து கொண்ட பி.எஸ்.என்.ஏ., கல்லூரி மாணவர் பிரஜித் ஐயப்பன், கல்லூரி மாணவர்களுக்கான பிரிவில் வெண்கலம் பதக்கம் வென்று சாதனை படைத்தார். வெற்றி பெற்ற அவருக்கு சான்றிதழ், பதக்கம் மற்றும் ரொக்க தொகை ரூ.25000 பரிசு வழங்கப்பட்டது.