உடையார்பாளையம்: ஜெயங்கொண்டத்தில் மே-17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தேர்தல் பிரச்சாரம்
சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் விசிக தலைவர் திருமாவளவன் போட்டியிடுகிறார். இந்நிலையில் அவருக்கு ஆதரவாக மே-17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் ஏப்-08 ஆம் தேதி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பாஜக ஆட்சியை அகற்ற பானை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டு கொண்டார்.