வத்தலகுண்டு காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் காவலர்கள் வத்தலகுண்டு பைபாஸ், பட்டிவீரன்பட்டி குறுக்குரோடு பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அதிவேகமாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில் விற்பனைக்காக கஞ்சா கடத்தி செல்வது தெரியவந்தது. போலீசார் பைக்கில் கஞ்சா கடத்தி வந்த, கோம்பைபட்டியை சேர்ந்த வெள்ளைச்சாமி, ஹரிஷ் ஆகிய 2 பேரை கைது செய்து நிலக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்