இராமநாதபுரம்: கோவில்வாடி கடற்கரையில் இலங்கைக்கு கடத்துவதற்காக காரில் கொண்டுவரப்பட்ட 7.50 லட்சம் மதிப்பிலான 50 கிலோ கஞ்சா பறிமுதல்
மண்டபம் கோயில்வாடி கடற்கரை பகுதியில் சுற்றித்திரிந்த கார் ஒன்றை புலனாய்வு பிரிவு அதிகாரிகள் மடக்கிப் பிடிக்க முயன்ற போது அவர்கள் கோவில்வாடி கடற்கரையில் 50 கிலோ எடை கொண்ட கஞ்சா பொட்டலங்களை வீசிவிட்டு சென்றுள்ளனர். கடற்கரையில் வீசி செல்லப்பட்ட கஞ்சா பட்டலன்களை பறிமுதல் செய்த சுங்க மத்திய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் காரில் தப்பிச் சென்ற நபர்களை கடலோர கிராமங்களில் தொடர்ந்து தேடி வருகின்றனர்