நிலக்கோட்டை: மண் ஏற்றி சென்ற டிப்பர் லாரி மோதி, தாத்தா, பாட்டி, பேத்தி பலி லாரி ஓட்டுநர் தப்பி ஓட்டம் வத்தலகுண்டு அருகே சோகம்
வத்தலகுண்டு அடுத்த, விருவீடு அருகே தெப்பத்துப்பட்டியைச் சேர்ந்தவர் விவசாயி காத்தவராயன் மனைவி ஜோதி பேரன் ஆச்சிபாண்டி பேத்தி ஆச்சியம்மாள் ஆகிய 4 பேர் சூப்பர் XL இருசக்கர வாகனத்தில் விருவீடு சென்று திரும்பிய போது, விருவீடு நோக்கி செம்மண் ஏற்றிக்கொண்டு அதிக வேகமாக சென்ற, டிப்பர் லாரி அவர்கள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் தாத்தா காத்தவராயன், பேத்தி ஆச்சியம்மாள் ஆகிய இருவரும் சம்பவ இடத்தில் உடல் நசுங்கி உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த பாட்டி மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்