வேடசந்தூர் அருகே உள்ள அரியபித்தாம்பட்டியை சேர்ந்தவர் பெருமாள். இவர் வேடசந்தூரில் கொல்லம் பட்டறையில் வேலை செய்து வருகிறார். வழக்கம் போல் கொல்லம் பட்டறையில் வேலை முடித்துவிட்டு வீட்டுக்கு செல்வதற்காக மாராம்படி ரோடு வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது வசந்தா நகர் பகுதியில் திருமாணிக்கனூரை சேர்ந்த கலையரசன் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக நடந்து சென்ற பெருமாள் பின்னால் மோதியது. இதில் பெருமாளுக்கு கால் எலும்பு முறிவு ஏற்பட்டு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.