திண்டுக்கல்லில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் அனைத்து சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு டாஸ்மாக் சிஐடியு சங்க மாவட்ட தலைவர் மகாமுனி தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் சீனிவாசன், ஏ.ஐ.சி.சி.டி.யு. சங்க மாவட்ட கவுன்சில் நிர்வாகி பொன்னுத்துரை முன்னிலை வகித்தனர். மாநில குழு உறுப்பினர் கோபால் வாழ்த்துரை வழங்கினார்.