தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கெண்டேனஹள்ளி பஞ்சாயத்தில் கெண்டேனஹள்ளி மற்றும் பெருங்காடு கிராமத்தில் ரூபாய் 7.60 ஆயிரம் மதிப்பீட்டில் இரண்டு பல்நோக்கு கட்டிடம் அமைக்கவும்,கெண்டேனஹள்ளி கிராமத்தில் ₹5. 65 ஆயிரம் மதிப்பீட்டில் பயணிகள் நிழற்கூடம் அமைக்கவும் முன்னாள் அமைச்சர். கே. பி. அன்பழகன் கலந்துகொண்டு பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.இதில் பொதுமக்கள் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் திரளாக கலந்து கொண்டனர்.