கரூர்: வெள்ளியணை காந்திகிராமம் பகுதிகளில் இந்திய கணசங்கம் கட்சியை வேட்பாளரை ஆதரித்து, தலைவர் பேராசிரியர் முத்துசாமி வாக்கு சேகரித்தார்
Karur, Karur | Apr 12, 2024 கரூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் இந்திய கணசங்கம் கட்சியின் வேட்பாளர் க.முருகேசன், கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தான்தோன்றிமலை, ராயனூர் அன்பு நகர், வெள்ளியணை வெங்கடாபுரம், காந்திகிராமம் கடைவீதி பகுதிகளில் வீடு வீடாக, ஏப்ரல் 13-ஆம் தேதி சனிக்கிழமை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை, வாக்கு சேகரித்தார்.வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சியில், இந்தியகணசங்கம் கட்சியின் நிறுவனத் தலைவர், மு.பெ.முத்துச்சாமி கலந்துகொண்டு வாக்கு சேகரித்தார்.