வேடசந்தூர்: துணை மின் நிலையத்தில் 22 ஆம் தேதி புதன்கிழமை மின்தடை அறிவிப்பு
வேடசந்தூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. அதன் காரணமாக வருகின்ற 22 10 2025 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என வேடசந்தூர் உதவி செயற்பொறியாளர் முத்துப்பாண்டியன் அறிவித்துள்ளார். அது சமயம் பொதுமக்கள் மாற்று ஏற்பாடுகள் செய்து கொள்ளுமாறு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.