வாலாஜா: ராணிப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோத போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட இருவர் குண்டர் சட்டத்தில் கைது- ஆட்சியர் உத்தரவு
ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்ட விரோதமாக போதைப்பொருட்கள் விற்பனையில் ஈடுப்பட்ட ராஜீவ் காந்தி மற்றும் அஜய் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் இந்த நிலையில் இருவரையும் ஓராண்டு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா உத்தரவு பிறப்பித்துள்ளார்