திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வன உரிமைச் சட்டம் 2006-ன்படி கள ஆய்வு அலுவலர்களுக்கான பயிற்சி மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத்தில், வன உரிமைச் சட்டம் 2006-ன்படி, பழங்குடியினர் மற்றும் மரபு வழி வன வாழ்வினர்களுக்கு தனி நபர் உரிமைகள், மற்றும் சமுதாய உரிமைகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.