தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் யூனியன் அலுவலகத்தில் முள் செடிகள் பரந்து விரிந்து காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து சாத்தான்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர் சுடலை ஏற்பாட்டின் பேரில் அலுவலக வளாகத்தில் உள்ள முள் செடிகள் அனைத்தும் ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றப்பட்டது. இதனை தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.