வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெறும் வளர்ச்சி பணிகள் குறித்து வேடசந்தூர் ஒன்றிய அதிகாரிகளுடன் எம் எல் ஏ காந்திராஜன் ஆய்வு மேற்கொண்டார். இதில் பேசிய அவர் கட்சி பாகுபாடு இன்றி எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் கோரிக்கை வைத்தால் அதனை உடனடியாக நிறைவேற்றி கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் வேடசந்தூர் தாசில்தார் மணிமொழி, வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.