மாநகராட்சி அலுவலகம் அருகே கிறிஸ்துவ மக்கள் முன்னணி மற்றும் கிறிஸ்தவ வன்னியர் கழகம் இணைந்து பெருந்திரள் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 2021 சட்டமன்றத் தேர்தலின் போது ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியாக கிறிஸ்தவ வன்னியர்களை எம்பிசி பட்டியலில் இணைப்பதாக தெரிவித்ததன் அடிப்படையில் கிறிஸ்தவ வன்னியர்கள் திமுகவிற்கு வாக்களித்தோம். ஆனால் ஆட்சி முடிவடையும் நிலையில் தற்போது வரை பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தியும், நிறைவேற்றாமல் உள்ளதாக கண்டன கோஷங்கள் எழுப்பினர்