ராமநாதபுரம் மாவட்டம் கியூ பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து தூத்துக்குடி மாவட்டம் புதூர் பாண்டியாபுரம் அருகே போலீசார் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர் அப்பொழுது நடிப்பையூர் பகுதியைச் சார்ந்த பிரபல கஞ்சா வியாபாரி சுதர்சன் பதுங்கி இருப்பது தெரியவந்தது தொடர்ந்து அவரிடம் இருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த 100 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர் சுதர்சனை கைது செய்தனர்.