திண்டுக்கல் கிழக்கு: திண்டுக்கல் அருகே வரி செலுத்தாமல் விதிமீறி பயணிகளை அழைத்து வந்த 3 ஆம்னி பஸ்கள் பறிமுதல் தலா ரூ.1 லட்சம் அபராதம்
தென்மாவட்டத்திற்கு வரும் சில ஆம்னி பேருந்துகள் வரி செலுத்தாமல் விதிமீறலாக பயணிகளை ஏற்றி வருவதாக வந்த புகாரின் அடிப்படையில், திண்டுக்கல் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தலைமையிலான தோமையார்புரத்தில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, பெங்களூருவில் இருந்து மதுரை வந்த 3 ஆம்னி பேருந்துகளை சோதனை செய்ததில் வரி செலுத்தாமல் விதிமீறி பயணிகளை அழைத்து வந்தது தெரியவந்ததையடுத்து, 3 ஆம்னி பஸ்களையும் பறிமுதல் செய்து, தலா ரூ.ஒரு லட்சம் அபராதம் விதித்தனர்