சிங்கம்புனரி: அணைக்கரைப்பட்டியில் நண்பனின் வீட்டின் கதவை திறந்து 23 சவரன் நகை திருடிய பட்டதாரி வாலிபரை 12 மணி நேரத்தில் தட்டி தூக்கிய போலீசார்
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே அணைக்கரைப்பட்டியில் சரவணன்-சுமதி வீட்டில் 23 சவரன் நகை திருடப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் சிசிடிவி ஆய்வு செய்து, பட்டதாரி வாலிபர் சுபாஷை 12 மணி நேரத்தில் கைது செய்தனர். நண்பரான சுபாஷ், வீட்டில் நகை வைக்கும் இடம் தெரிந்து, சாவி எடுத்து திருடியது தெரியவந்தது. நகைகள், வாகனம், போன் பறிமுதல் செய்யப்பட்டு, விசாரணை நடக்கிறது. போலீசாரை பொதுமக்கள் பாராட்டினர்.