திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக கட்டிடத்தில் ஏற்கனவே வைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியார் வளாகம் என்ற பெயர் பலகையை வைக்க வேண்டும். திண்டுக்கல் பேருந்து நிலையத்திலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் பேருந்தில் பெயர் பலகை முன்பு இருந்தது போல் வேலு நாச்சியார் அலுவலகம் என பெயர் வைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி திண்டுக்கல் மாவட்ட ராணி வேலு நாச்சியார் சேனை சார்பில், வீர வேலு நாச்சியார் வேடம் அணிந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.