தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திண்டுக்கல் என்.ஜி.ஓ. காலனியில் உள்ள உழவர் சந்தையில் காய்கறி விற்பனை அதிகரித்தது. வழக்கமாக தினமும் 10 முதல் 12 டன் வரை விற்பனையாகும் நிலையில், கடந்த 2 நாட்களில் மொத்தம் 37 டன் காய்கறிகள் விற்பனையாகியுள்ளன. இதில் தக்காளி 4 டன், சின்ன வெங்காயம் 2 டன், பல்லாரி 2 டன், உருளைக்கிழங்கு 1.5 டன், பீட்ரூட், கேரட், கத்தரி தலா 1 டன் என விற்பனையானது.