படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே அஞ்சு வழி பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இதற்கிடையே படத்தின் போது காலை முட்டியதில் கதாநாயகன் அசோக்குமார் காயமடைந்தார். இதுகுறித்த செய்தி வெளியாகி பரபரப்பானது. இந்நிலையில் வட மஞ்சுவிரட்டு படத்தின் படப்பிடிப்பு இன்று நிறைவு பெற்றது.