கயத்தாறு அருகே உள்ள நாகலாபுரம் கீழத்தெரு பகுதி சேர்ந்தவர் வேலு முத்து இவர் கயத்தாறு அருகே உள்ள கல்குவாரியில் வேலை பார்த்து வந்தார் இந்நிலையில் வழக்கம் போல வேலைக்கு சென்ற அவர் அங்கு உள்ள டிராக்டரை குவாரிக்குள் ஓட்டி செல்லும் பொழுது திடீரென டிராக்டர் நிலை குலைந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது இதில் வேலு முத்து பலத்த காயமடைந்தார் உடனடியாக கயத்தாறு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்