நத்தம்: வெள்ளிமலை ஆண்டவர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்
திண்டுக்கல் சிறுமலை அகஸ்தியர்புரத்தில் உள்ள வெள்ளிமலை ஆண்டவர் கோவிலில் 2025 ஆம் ஆண்டு கடைசி சனி பிரதோஷம் சிறப்பு அபிஷேக வழிபாடு நடைபெற்றது. இதில் நல்லெண்ணெய், அரிசிமாவு, திருமஞ்சன பொடி,வாசனைதிரவியம், பால்,தயிர்,எலுமிச்சம்பழச்சாறு, பழங்கள்,சர்க்கரை, பஞ்சாமிர்தம், தேன், இளநீர், விபூதி, சந்தனம், பன்னீர், அன்னம், ஜலம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகம் செய்து சிவலிங்கத்திற்கும், நந்திதேவருக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சனி பிரதோஷ சிறப்பு அபிஷேகம் வழிபாடு நடைபெற்றது.