வேடசந்தூரில் அம்பேத்கரின் 69 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது முழு உருவச் சிலைக்கு பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். வேடசந்தூர் போலீசார் அனுமதி வழங்கிய நேரத்தில் ஒவ்வொரு கட்சியினர் மற்றும் அமைப்பினர் வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தி சென்றனர். வேடசந்தூர் இந்து மக்கள் கட்சியின் சார்பில் அனுமதி அளிக்கப்பட்ட நேரத்தில் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பிறகு பாரத் மாதா கி ஜே ஓம் காளி ஜெய் காளி என்று கோஷமிட்டனர். இதனால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.