திண்டுக்கல் அருகே கொட்டப்பட்டி பகுதியைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தான் கொட்டப்பட்டி பகுதியில் 30 வருடங்களுக்கு மேலாக வசித்து வருவதாகவும் உங்களுடைய ஸ்டாலின் முகாமில் இலவச வீட்டுமனை பட்டா வேண்டி மனு அளித்து எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை எனவும் தான் குடியிருக்கும் வீட்டிற்கு நத்தம் இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பலமுறை மனு அளித்தும் எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை எனவும் தெரிவித்தனர்.