யாகப்பன்பட்டியை சேர்ந்த சேசுராஜ் கடந்த 8-ம் தேதி R.M.T.C.காலனி அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது மர்ம கும்பல் வழிமறித்து சரமாரியாக வெட்டி கொலை செய்தனர் அதே நேரத்தில் சேசுராஜின் 2-வது மனைவி தீபிகா யாகப்பன்பட்டியில் வீட்டின் வாசலில் வைத்து வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் போலீசார் 9 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய வேடப்பட்டி, ஞானநந்தகிரி பகுதியை சேர்ந்த வெற்றி (எ) முனீஸ்வரன் என்பவரை கைது செய்தனர்