உடையார்பாளையம்: கோடாலி கிராமத்தில் அரசுக்கு சொந்தமான தைல மரதோப்பில் கள்ளதனமாக மதுவிற்றவர் கைது
அரியலூர் மாவட்டம் தா.பழூர் காவல் நிலைய போலீசார் கோடாலி கிராமத்தில் இன்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அக்கிராமத்திலுள்ள அரசுக்கு சொந்தமான தைல மரதோப்பில், கள்ளதனமாக மதுவிற்பனை செய்து கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த முத்துமாணிக்கம் என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்த 18 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.