மயிலாடுதுறை: நீடூரில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் ஒருவரை சரமாரியாக பட்டா கத்தியால் வெட்டும் CCTV காட்சிகள் வைரல் #viral
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே நீடூர் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் முகமது ஹாலிக்(36) இவர் AMH திருமண மண்டபத்திற்கு எதிர்ப்புறம் மரத்தடிநிழலில் இருவரிடம் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் இரண்டு மர்ம நபர்கள் வந்தனர். ஒருவர் இறங்கி ஹாலிக்கை பட்டா கத்தியால் சரமாரியாக வெட்டிய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வைரல்