மண்ணச்சநல்லூர்: சமயபுரம் நால்ரோடு பகுதியில் தெப்பக்குளத்தில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞர் உடல்
திருச்சி மாவட்டம் சமயபுரம் நால்ரோடு பகுதியில் சமயபுரம் மாரியம்மன் கோவில் கட்டுப்பாட்டில் உள்ள தனியார் தெப்பக்குளத்தில் 30 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் அழுகிய நிலையில் கிடப்பதாக சமயபுரம் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்ததின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சமயபுரம் போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகிறனர்