திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வேலுநாச்சியார் வளாகத்தில், புதிய கல்லூரிகள் திறப்பு விழா, புதிய பேருந்துகள் துவக்க விழா, மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று கலந்து கொண்டார். விழா மேடையின் வெளியே அலங்காரத்துடன் கூடிய நுழைவு வாயிலில் 200-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் உள்ள எல்லா கட்டப்பட்டிருந்தன. விழா முடிந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கிளம்பியவுடன், அங்கு இருந்த தூய்மை பணியாளர்கள் வாழைத்தார்கள் வெட்டி சென்றனர்.